ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது
புரிதல் என்பது
வார்த்தைகளில் அல்ல
உணர்வுகளில் ஒன்றி
இருக்க வேண்டும்
ஞாபகங்கள்
அழிக்கபடுவதில்லை
மாறாக ஆழமாக
விதைக்கபடுகின்றன
சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது
பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்
நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்
சில உறவுகள்
பளீரென மின்னலாய்
வந்து அதிரடியாக
பல மாற்றங்களை
செய்து விட்டு
சென்று விடுகிறார்கள்
நம் வாழ்க்கையில்
உளறல்கள் கூட
கவிதையாகிறது
சில நேரங்களில்
—
கஷ்டங்களை
தாங்கும் சக்தி
அற்று போனதால்
கண்கள்
உருகி வழிகிறதோ
எல்லாமே
சில காலம் தான்
அது உறவாக
இருந்தாலும் சரி
உயிராக
இருந்தாலும் சரி
வாழ்க்கையில்
பாதியில் வந்து
பாதியில் விட்டு
செல்பவர்களே அதிகம்
ஏமாற்றங்கள்
மிஞ்சினாலும்
எதிர்பார்ப்பை
நிறுத்தி
கொள்வதில்லை
மனது
சில வினாக்களுக்கு
பதில் நாம் மட்டுமே
அத்தனை
கேள்விகளுக்கும்
சிறந்த பதில்
மௌனம்
நீதான் முக்கியம்
என தொடங்கும்
உறவுகள் எல்லாம்
யார் நீ
என்று முடிகிறது
புன்னகையால்
கடந்திடுங்கள்
சில மாற்றங்களை
வலிகளை வலிமையாக்கும்
வல்லமை கொண்டவை அவை
வெற்றிடத்தின் வலி
உணரவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை
உன்னிடம் தொலைத்த
என் நிஜத்தினை
எங்கே சென்று
தேடுவது
எதன் மீதும்
அதிக அன்பு வை
வைக்கிறோமோ
அதை நினைத்து
பலமுறை வருந்த
வேண்டிய நிலை வரும்
வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை
தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது
விடை தேடும்
பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினாவே
புரியவில்லை
வாழ்க்கையில்
வரும் எதுவும்
சொல்லி விட்டு
வருவதில்லை
ஆனால்
வந்த எதுவும்
எதையோ
சொல்லி
கொடுக்காமல்
போவதில்லை
வாழ்க்கையில்
தவறாக தெரிந்த
பல முடிவுகள் இன்று
சரியாக தெரியலாம்
சரியாக தெரிந்த
பல முடிவுகள் நாளை
தவறாக தெரியலாம்
உரிமை இல்லாத இடத்தில்
ஓராமாக நிற்பதை விட
வெளியேறி விடுவது மேல்
கஷ்டம் கூட
இஷ்டம் ஆகிவிடுகிறது
ஆதரவாய் உன் தோள்
சாய்கையில்
விடைகள்
சில தேடுகையில்
வினாக்களே
பல எழுகின்றன
வாழ்க்கையில்
பேசிய வார்த்தைகள்
நினைவுகளாகவும்
பேசாத வார்த்தைகள்
கவிதைகளாகவும்
என்னிலடங்கும்
என் இதயத்துடிப்பில்
ஏனோ எண்ணிலடங்கா
உன் நியாபகங்கள்
ஆழமான
கடலில் இறங்குறதும்
ஆழமான அன்பில்
இறங்குறதும் ஒண்ணு தான்
கரை சேர்வது கடினம்
நான் நானாகவே இருக்கிறேன்
வளர்வதும் தேய்வதும்
உங்களின் பார்வையை பொறுத்தது
எதையுமே
எதிர்பார்க்காத போது
கிடைத்த அன்பு
எதிர் பார்க்கும் போது
தூரமானதேனோ
அன்பு வேண்டும் என்று
எவரிடமும் கெஞ்சாதீர்கள்
அது உண்மையாக இருந்தால்
நீங்கள் கையேந்த
வேண்டிய அவசியமில்லை
சில வரிகளில் கூறப்படும்
வலிகளின் ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
உணர்வுபூர்வமாக
அனுபவப்பட்டவர்களை தவிர
உயிர்
எழுத்தாய்
இருந்தேன்
மெய்
எழுத்தாய்
வந்தாய்
உயிர்மெய்
எழுத்தானோம்
விமர்சனம் செய்வது உங்களுக்கு
வாடிக்கையாகிப்போன
ஒன்று தான்
உங்களோடு விவாதித்து
எனக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை
ஆதலால் தான் கேட்டுவிட்டு
மவுனமாக
கடந்து செல்கிறேன்
எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்
பேரன்பில்
உனக்கானது என்று
உணர்த்தப்படுவதை
விடவும்
தனக்கானது தான் என்று
உணரும் தருணங்கள்
பேரழகு
இணைவது எல்லாம்
என்றோ பிரிவதற்கே
வார்த்தைகளை மட்டுமே
புரிந்து கொள்பவர்களால்
ஒரு போதும் உணர்வுகளை
புரிந்து கொள்ள முடியாது


